Saturday 22 August 2015

மனித மூளை ஆய்வுகூடத்தில் வளர்ப்பு

மனித மூளை ஆய்வுகூடத்தில் வளர்ப்பு

முதன்முறையாக ஆய்வு கூடத்தில் மனித மூளையை செயற்கையாக விஞ்ஞானிகள் வளர்த்துள் ளனர். தாயின்வயிற்றினுள் இருக்கும் ஐந்து வார சிசுவிற்கு இருக்கும் அளவு உள்ள இந்தமூளை வெறும் பென்சில் அழி றப்பர் அளவுள்ளது.

ஆனாலும் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டதே தவிர, எந்தவித உணர்வுகளையும் உணரும்ஆற்றலை இந்த “வளர்த்த” மூளை கொண்டில்லை. அதுமட்டு மல்லாது, இதைவிட பெரிதாகமூளையை வளர்ப்பதற்கு, சிக்கலான இரத்த நாளங்கள் தேவைப்படும், அப்படியான இரத்தநாளங்களை உருவாக்கத் துடிக்கும்இதய மொன்றும் வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இப்படி தொழிற்படாதமூளையை ஏன் உருவாக்கவேண்டும் என்றுநீங்கள் சிந்திக்கலாம். உண்மையிலேயே இந்தமூளையை உருவாக்கியதன் நோக்கம் செயற்கையாக சிந்திக்கக்கூடிய ஒருஅமைப்பை உருவாக்குவது இல்லை, மாறாக மூளை வளரும்காலத்தில் ஏற்படும் நோய்கள் எப்படி மூளையைத் தாக்குகின்றன என்பதனைப்பற்றி ஆய்வு செய்யவாகும்.

மற்றும் மூளையில் ஏற்படும் தாக்கங்களான அல்ஸைமர்,பார்கின்சன்ஸ் போன்ற குறை பாடுகளுக்கு தேவையான மருந்துகளைப் பரிசோதித்துப் பார்க்கவும் இந்த “ஆய்வுகூட மூளை” பயன்படும். இதனால் மனிதர்கள் மற்றும் குரங்குகளில் புதியமருந்துகளைப் பரிசோதிப்பதையும் குறைக்கலாம்.

இந்த மூளையை உருவாக்க, வளர்ந்த மனிதனின் தோல்க் கலங்களை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்தத் தோல்க் கலங்கள், குருத்தணுவாக (stem cell) மாற்றப்பட்டு, பின்னர் வேறு எந்தவொரு திசுக்களாகவும் மாற்றப்படக்கூடியவை. இந்த முறையைப் பயன்படுத்தி, டாக்டர் ஆனந்த் தலைமையிலான ஆய்வுக்குழு மனிதமூளை மற்றும் நரம்புகளை உருவாக்கியுள்ளனர்.

இதுவரை செயற்கையாக வளர்க்கப்பட்ட மனித மூளைகளில் இதுவே மிகச் சிறந்தது என்றுஇதனை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர். இந்த செயற்கை மூளை, 99% மனித மூளையின் கலங்களையும் ஜீன்களையும் கொண்டுள்ளதுடன், சிறியமுதுகுத்தண்டு (spinal cord) மற்றும் விழித்திரை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

உயிரியலில் ஒரு புதிய சாதனை என்றபோதிலும், ஆனந்த் தலைமயிலான குழு, இந்தஆய்வின் முழு விபரத்தையும் வெளியிடவில்லை. பொதுவாக புதிய அறிவியல் முறைமைகள் கண்டறியப்படும் போது அவைவேறு தனிப்பட்ட ஆய்வாளர்களால் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ஆய்வறிக்கைகளாக வெளியிடப்படும். ஆனால் இந்த செயற்கை மூளை விடயத்தில் அப்படி ஆய்வறிக்கைகளை ஆனந்த் தலைமையிலான ஆராய்ச்சிக்குழு வெளியிடவில்லை.

இதனால், உண்மையிலேயே இந்த செயற்கை மூளை எந்தளவு சாத்தியமானது, மற்றும்அவற்றின் முழுமையான பயன்களைப் பற்றி மற்றைய ஆய்வாளர்களால் கருத்துத் தெரிவிக்கமுடியவில்லை.

இதனைப் பற்றி ஆனந்த் குறிப்பிடும்போது, இந்த மூளையை உருவாக்க அவர்கள் புதிதாக ஒரு முறையைக் கையாண்டதினால் அதனைக்காப்புரிமைப் படுத்தும் வரையில், எல்லோருக்குமான ஆய்வறிக்கையை வெளியிடப்போவதில்லை என்றார்.



லட்சுமி மேனன்! - 8 பேரை லவ் பண்ணியிருக்கே… போர் அடிச்சா கழட்டி விட்டிடுவேன்

படங்களில் சேலை, பாவாடைதாவணி என்று கிராமத்து கதைகளில் நடித்துள்ள லட்சுமிமேனனை குடும்ப குத்துவிளக்கு என்று கோலிவுட் முத்திரை குத்தியுள்ளது.  பார்ப்பதற்கு பச்சபுள்ள மாதிரி இருக்கும் இவர் நிஜ வாழ்க்கையில் எட்டுபேரலவ் பண்ணியிருக்காராம்…

படித்து கொண்டிருந்தாலும் விடாமல் காதலித்து அதை அவரே பிரேக்அப் செய்து விடுவாராம். 12ம் வகுப்பு முடித்து விட்டு தற்போது பி.ஏ. இங்கிலீஸ் படித்துவருகிறார் லட்சுமி மேனன். இவர் சமீபத்தில் வாரபத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து கூறியுள்ளார். அதில், சினிமாவுல மட்டும் இல்லை… நிஜத்துலயும் எட்டுபேரைக் காதலிச்சிருக்கேன். ஆனா, எதுவுமே ரெண்டு மாசத்துக்கு மேலஇருந்தது இல்லை. அதுக்குள்ள எனக்குபோர் அடிக்கும். நானே பிரேக்-அப் பண்ணிடுவேன். ஜிகர்தண்டா ஷூட்டிங் ஸ்பாட்ல சித்தார்த் எங்கிட்டபேசும்போது, அப்படியே பறக்கிறமாதிரி இருக்கும். ஜெயம் ரவியையும் ரொம்ப பிடிக்கும். ஆனா, என்னுடைய பேட்லக். ரெண்டுபேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு என்று சோகமாக கூறியுள்ளார்.


சுயநலம் என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவுக்கு திரையில் வெடிக்கும் நட்சத்திரங்கள் நிஜ வாழ்வில் எப்படியிருக்கிறார்கள் பாருங்கள்? சமீபத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனை சந்தித்து கதை சொல்ல போயிருந்தார் ஒரு இயக்குனர். அது காக்கி யூனிபார்ம் போட்ட கம்பீர போலீஸ் கதை. டைரக்டரை கதை சொல்ல அனுப்பியவர் இந்த விபரத்தை முன்னாடியே சொல்லிவிட்டாராம். அதுக்கென்ன? லம்ப்பா ஒரு அட்வான்ஸ் கொடுத்துட சொல்லுங்க. மிச்சத்தை ஷுட்டிங் நடக்க நடக்க வாங்கிக்கிறேன் என்று கூறிவிட்டு டைரக்டரையும் வரவழைத்துவிட்டார் அர்ஜுன்.

அவர் கதை சொல்ல ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே, ‘இந்த கொழுக்கட்டை ஏற்கனவே நம்ம இட்லி பானையில் வெந்துகிட்டு இருக்கே’ என்ற உண்மை புரிந்துவிட்டதாம் அர்ஜுனுக்கு. இருந்தாலும், ‘இதே போலொரு கதையில் நான் நடிச்சுகிட்டு இருக்கேன்’ என்று சொன்னால், வந்த ஆளு வழுக்கிட மாட்டாரா? பொறுமையாக கதையை கேட்டவர், “கதை நல்லாயிருக்கு. நாளைக்கு வந்து இவ்ளோ அட்வான்ஸ் கொடுத்துருங்க. அதுக்கப்புறம் தேதிகள் சொல்றேன்” என்று அனுப்பி விட்டார். எல்லாம் அவர் நினைத்தபடியே நடந்தது. சில நாட்கள் கழித்து டைரக்டரை அழைத்த அர்ஜுன், “இந்தாங்க” என்றொரு வீடியோ சிடியை கொடுத்தாராம்.

“நீங்க இந்த படத்துலேர்ந்துதானே கதையை சுட்டீங்க? இதே கதையை சுட்டு இன்னொருத்தர் என்னை வச்சு படம் எடுத்து முடிச்சுட்டாரு. ஆடியோ ரிலீஸ் வர்ற மாசம் நடக்கப் போவுது. அதனால் வேற டி.வி.டி ஒண்ணு கிடைச்சா பார்த்துட்டு கதையை ரெடி பண்ணிட்டு வாங்க. கேட்கிறேன். படம் எடுப்போம்” என்று கூற, பேரதிர்ச்சியாகிவிட்டாராம் புது டைரக்டர்.

அதற்கப்புறம் அர்ஜுன் சொன்னதுதான் வியப்பின் உச்சம். “ப்ரோ… உங்க தயாரிப்பாளர்ட்ட இருந்து வாங்கிய பணம் செலவாயிருச்சு. அட்வான்சை திருப்பிக் கொடுங்கன்னு மட்டும் வந்துராதீங்க. வேற டி.விடிய பார்த்து கதையோட வாங்க” என்றாராம்.

No comments:

Post a Comment